COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

கருவேப்பிலை




  .


இது  கருவேப்பிலை என்று அழைக்கப்பட்டாலும் இதன் உண்மையான பெயர் கறிவேப்பிலை  தான்.

 இது ஒரு சத்து நிறைந்த கீரையாகும். இதில் 63 சதம் நீரும், 6.1 சதவீதம் புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவீதம் நார்ச்சத்தும், 18.7 சதவீதம் மாவுச்சத்தும் இருக்கின்றன. இந்த கீரை 108 கலோரி சக்தியை கொடுக்கிறது. சுண்ணாம்பு சத்து. மக்னீசியம். மணிச்சத்து, இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் முதலியன சத்தும் இந்த தழையில் உண்டு.

உயிர்சத்து மிகுதியாக உள்ள இந்த கீரையில் வைட்டமின் A 12.600 அனைத்துவகை அலகு கொண்டதாகும். உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்த த்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது. இந்த கீரை மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கவல்லது.

கறிவேப்பிலை வேம்பு இலைப் போன்ற தோற்றமளிக்கும். ஆனால் கறி வேப்பிலை வேப்பம் இலையைப் போக் பச்சையாக இல்லாமல் சற்று கரும்பச்சை நிறமாக இருக்கும். மரத்தின் பட்டையும் சிறிது சுறுசுறுப்பாக இருக்கும். இதனாலேயே இதனைக் கறுவேம்பு என்பர். இதை ஒட்டியே வடமொழியில் ‘காலசாகம்’ என்ற பெயர் கருவேப்பிலைக்கு ஏற்பட்டுள்ளது. இதனைக் கால்க்ஸ் என்றால் செம்பு என்னும் பொருள்படக்கூடியது. இந்த மரம் செம்புநிறச் சாயல் உள்ள காரணத்தினால் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு, அவை நாட்டுக்கறிவேப்பிலை,  ட்டுக்கறிவேப்பிலை என்ற இரு வகையாகும்.

நாட்டுக் கறிவேப்பிலை உணவாகவும், காட்டுக்கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது. காட்டுக் கறிவேப்பிலையின் இலை சற்றுப் பெரிதாகவும் கசப்பு அதிகம் உள்ளதாகவும் இருக்கும். நாட்டுக் கறிவேப்பிலை இலை அதனைவிடச் சிறிதாகவும், இனிப்பும், துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாக இருக்கும்.

பூக்கள் கொத்தாக அமைந்திருக்கம், கறிவேப்பிலைப் பழம் உருண்டை வடிவாக கொண்டது. இந்த பழம் சதைப்பற்றாக இருக்கும். காய் பழுத்து சிவப்பாகி பின்னர் கருப்பு நிறமாக மாறிவிடும். கறிவேப்பிலையின் இலை, ஈர்க்கு,பட்டை, வேர் முதலியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.

கருவேப்பிலை சாப்பிட்டால் கண் பார்வைக்கோளாறு உங்களை அணுகாது. எலும்புகள் பலப்படும் சோகை நோய் வரப்பயப்படும்.  புண்கள் விரைவில் ஆற கருவேப்பிலை உதவுகிறது.
வாய்ப்புண் உள்ளவர்கள் கருவேப்பிலை சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும்.  வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளைப்போக்கும் குணம் கருவேப்பிலைக்குண்டு. மலச்சிக்கலைப்
போக்கும், ஜீரணசக்தியைக்கூட்டும், பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தைக்கட்டுப்படுத்தி வாந்தி யைத்தடுத்து வயிற்றில் ஏற்படும் வயிற்று இரச்ச லைத்தடுக்கும்

தினமும் சாப்பிடும் முன் ஒரு மேசை கரண்டி அளவு ஒரு பிடி சாதத்தில் கலந்து முதலில் சாப்பிடுங்கள் பிறகு மீதி சாப்பாடாஇ சாப்பிடுங்கள்.
சக்கரை வியாதிக்கு நல்ல மருந்து இதன் இல்லை சாறு என கண்டறியப்பட்டுள்ளது
இதன்  ஈர்க்கு ,இலை பட்டை வேர் முதலியை யாவும் மருத்துவ குணம் உடையவை .
,ஈர்க்கு ,இலை பட்டை வேர் இவைகளை கஷாயம் வைத்து சாப்பிட்டால் பித்தம் ,வாந்தி முதலியவை நீங்கும் இதன்  .ஈர்க்கு சுக்கு , சீரகம் ,ஓமம் இவைகளை தலா 24  கிராம் eduththu இரண்டு  லிட்டர்  சுத்தமான  தண்ணீரில் கொட்டி கால் படியாகும் வரை சண்ட காய்ச்சி
பின் சிறிது சக்கரை சேர்த்து கலை மாலை இரண்டு வேலை அருந்த வேண்டும் .

குடல் வாயுவுக்கு கை கண்ட மருந்து.  இலையை அரைத்து கலை மாலை கொட்ட பக்கு அளவு முன்று நாளுக்கு சாப்பிட்டால் சீத பேதி குணமாகும் .உள்சூடு குறையும் .
 கருவேப்பில்லையை இனி சமையலில் கண்டால் ஒதுக்கி வைக்காதீர்கள் .முதலில் அதை சாப்பிடுங்கள்

ஒல்லியாக உள்ளவர்கள் ஒரு மேசை கரண்டி கருவேப்பிலை பொடி, நெய் ஒரு ஸ்பூன், சாதம் கலந்து சாப்பிடுங்கள்.
டயட்டில் இருப்பவர்கள் ஆலிவ் ஆயில் () நல்லெண்ணை கலந்து சாப்பிடவும்.
கருவேப்பிலை கொழுந்து, கீழாநெல்லி கொழுந்து இரண்டையும் சேர்த்து  மென்று விழுங்கி வர வெண்புள்ளிகள் குறையும்.


  

1 கருத்து:

“தோல் நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம்” சொன்னது…

#Psoriasis, #Vitiligo, #Eskimo, #Funculs, #Ringworm, #Warts, #Fade, #Malignant Tumors, #Varicose Veins, #காளாஞ்சகப்படை, #சொரியாசிஸ், #சோரியாசிஸ், #வெண்புள்ளி, #வெண்குஷ்டம், #தோல்நோய்கள், #Skin Problem

அனைத்து வகையான தோல் நோய்களும் முற்றிலும் 100% தீர்ந்து வாழ்நாள் முழுக்க “தோல் நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம்” என்னும் நிலையை 120 நாட்களில் அடையலாம். உணவுஅறமும் & மருந்தும் கிடைக்கும்.

விபரங்களுக்கு கீழ்கண்ட வலைப்பக்கங்களை படியுங்கள்.

https://skin-disesis.blogspot.com/