COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

வெந்தயக்கீரை,வெந்தயம்

 உலகத்திலேயே இந்தியாவில் தான் வெந்தயம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.  அவை ராஜஸ்தான், குஜராத், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஸ்ட்ரா, ஹரியானா, மற்றும் பஞ்சாப். வளமான மண்ணில் வெந்தய விதையை விதைத்தால், ஈரப்பதம் கிடைத்தவுடன் செடி முழைக்க ஆரம்பிக்கும். இதற்குத் தண்ணீர் தேங்கக்கூடாது. 

 வெந்தயக்கீரை என்பது முளைத்து வளர்ந்துள்ள சுமார் 3 அங்குலம் உயரமுள்ள வெந்தயத்தையே குறிக்கும். வெந்தயக்கீரையானது வெந்தயத்திற்கான அனைத்து நற்குணங்களையும் தன்னகத்தே கொண்டது. வெந்தயக்கீரை மேலும் உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது.
வெந்தயக்கீரை எளிதாக மல ஜலம் கழிய வழி செய்திடும். சிறுநீர்ப் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் மூப்படைந்த தசைகளை இறுக்கி இளமையை காத்திடக்கூடிய ஓர் உன்னத மூலிகையாகத் திகழ்கிறது. மேலும் வெந்தயக்கீரை வயிற்றுப்பொருமலை தவிர்க்கக் கூடியது. ஜூரத்தை குறைக்கக் கூடியது. இருமல், சளி போன்ற கப கோளாறுகளை சீராக்கக் கூடியது. ஜீரண சக்தியை தூண்டக் கூடியது. வயிற்றுப்போக்கை தவிர்க்கக் கூடியது. நரம்புகளுக்கு வலுவூட்டக் கூடியது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடியது மற்றும் வயதிற்கு முந்திய முதிர்ச்சியையும் முடி உதிர்வதையும் தவிர்க்கக் கூடியது.
வெந்தயக் கீரையில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, தாமிரச்சத்து போன்றவை தாராளாமாக உள்ளது.
வெந்தயக்கீரையை எவரும் எளிமையாகத் தாங்கள் வீடுகளிலேயே தேவைக்கு ஏற்ப வளர்த்துக் கொள்ளலாம். வீடுகளில் இருக்கக் கூடிய பயனற்ற டப்பாக்கள் மற்றும் தகரங்கள் அல்லது தொட்டிகளில் சிறிது குப்பை மண்ணை போட்டு வைத்துக் கொண்டு அதில் வெந்தயத்தை தூவி தினசரி நீர் தெளித்து வர வெந்தயக்கீரை வீட்டிலேயே நினைத்த மாத்திரத்திலேயே கிடைக்கும்.
நன்கு கீரையாக வளர்ந்த வெந்தயம் பயன்தர சுமார் 7 – 10 நாட்கள் ஆகும். எனவே 3 – 4 தொட்டிகளில் மண் நிரப்பி 10 நாள் இடைவெளியில் வெந்தயத்தை தூவி தினசரி நீர் தெளித்து வந்தால் வாரம் ஒரு நாள் வெந்தயக்கீரை தொடர்ச்சியாக கிடைத்து விடும்.கடல் கரை சார்ந்த மணற்பாங்கான இடங்களில் நன்கு வளர்கிறது. நன்சை நிலத்திலும் புன்சை நிலத்திலும் வளரும். இதற்கு வெய்யிலும் தேவை.  இது ஒரு சிறு செடி, சுமார் 60 செ.மீ. உயரம் வரை வளரும்.. இதன் இலை நேர் அடுக்கில் அமைந்திருக்கும்.  இலைகள் மூன்றாகப் பிறியும் 5 செ.மீ. நீளமுடையது. இது செடியாக இருக்கும் பொழுது பூ பூக்கும் பூ வெண்மை நிறமாக முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். செடியாக இருக்கும் போது கீரையாகப் பறித்துப் பயன் படுத்துவார்கள். இதை கடைகளில் கிடைக்கும். பூக்கள் முற்றிக் காய்கள் உண்டாகும். அதைக் காயவைக்கவேண்டும். காய்ந்த விதையை வெந்தயம் என்பார்கள் விதை இரு பிளவு போன்றிருக்கும்  அது 50 -110 மில்லி  நீளம் இருக்கும். அது மரக்கலரில் இருக்கும். ஒரு கிலோ வெந்தயத்தில் சுமார் 50,000 விதைகள் இருக்கும்.  இது மூன்று மாத த்தில் வளரக்கூடியது.  இந்தச் செடியை ஆதிகாலத்தில் மாட்டுத்தீவனமாகவும் பயன் படுத்தினார்கள்.  இதை சமயல் மற்றும், மருந்தாகவும் பயன் படுத்துவார்கள்.

மருத்துவப்பயன்கள் :;- வெந்தயம் வயிற்றுப் போக்கைக்குணப்படுத்தும், தாய்பால் பெருகும்,  தீப்புண்ணை ஆற்றும், மதுமேகம் குணமாகும், உடல் கட்டிகள் பழுத்து உடையச் செய்யும், வலி போக்கும். சர்கரை வியாதியைக் குறைக்கும்.

பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.

ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

 வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சலி தணிந்து ஆறும்.

வெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக்க் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.

வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.

இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்து, அதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீர்ழிவு நோய் சிறிது சிறிதாக வீரியம் குறையும்.

தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது.
முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடுசெர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும்.

முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.

வெந்தயக்கீரை.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தாலகு உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும். இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது.  வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு செர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது  வாய்ங்குவேக்காடு வராது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.
வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது.
 வெந்தயக் கீரை: வயிற்று வலி, குடல் புண், வயிற்றுக்கடுப்பு போன்றவைக்கு நல்லது. உயிர்ச்சத்து ஏ அதிக அளவில் உள்ளது. கண் பார்வைக் கோளாறை நீக்கும். இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் கூடவே இருப்பதால் அனைவருக்கும் நல்லது. முக்கியமாய் வளரும் குழந்தைகளுக்கு, மூல நோய் இருப்பவர்களுக்கு, அதிகமாக வெள்ளை படும் பெண்களுக்கு, நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை நல்லது. இது உடல் சூட்டைத் தணித்து, உடலுக்கு வலுவையும் ஊட்டும்.

இதைப் பயிராக்குவதும் எளிது. வெந்தயத்தை எடுத்துக்கொண்டு சிறிது நீர் தெளித்து ஓர் இரவு முழுதும் வைக்கவும். மறுநாள் அதை ஒரு தொட்டியிலேயோ, அல்லது தோட்டத்திலேயோ விதைக்கவும். ஓரிரு நாட்களில் முளை வந்துவிடும். நான்கு அல்லது ஐந்து அங்குலம் செடி வளர்ந்ததுமே அவற்றைப் பறிக்கலாம். தேவை எனில் மேலும் வளரவும் விடலாம். வெந்தயக் கீரையில் இருக்கும் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் தலை மயிர் வளரவும் உதவி செய்கிறது. வெந்தயக்கீரையை அரைத்துச் சாறோடு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சித் தொடர்ந்து தலைக்குத் தடவிக்கொண்டு சிறிது நேரம் ஊறிவிட்டுக் குளித்தால் மயிர் அடர்த்தியாக வளரும். தலையில் இருக்கும் சூடும் தணியும்.


வெறும் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து கொண்டு காலை வெறும் வயிற்றில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். வெந்தயக்கீரையைப் பல விதங்களில் சமைக்கலாம். வெந்தயக்கீரையைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு பருப்போடு சேர்த்துக் கூட்டு செய்யலாம்.
 எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.

இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.

மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
   வெந்தயத்தை அப்படியே உபயோகிப்பதால் கசப்பாகவும், விநோத வாசனையும் உடையதாக இருப்பதால் தான் இதனை வறுத்துப் பொடித்துப் பயன்படுத்துகிறோம். இதன் கசப்பு ருசியும், பாகற்காய் கசப்பைப் போல் ஒருவித ருசியாக நாவுக்குப் பழகிவிடுகிறது. இந்தக் கசப்பு ருசிக்குக் காரணமான க்ளைக்கோசைட்ஸ் (clycosides) வெந்தயத்தில் தூக்கலாக இருக்கிறது. நல்ல பசி கிளப்பியாக இந்த கசப்பு ருசி இருப்பதோடு உணவு ஜீரணத்துக்கு அத்தியாவசியமாக பித்த நீரை தாராளமாக சுரக்கத் தூண்டிவிடுகிறது. அசைவ உணவுக்காரர்களுக்கு இது நன்மை கூட்டுகிறது.
              வெந்தயத்தில் பாஸ்பேட்டுகளும், லிஸிதின், நியூக்லியோ, அல்புமின் நிறைந்து இருப்பதால் உடல் வளர்ப்பதோடு பசியின்மையைப் போக்குகிறது. அனிமியா என்னும் இரத்தசோகை அண்டாது. நிக்கெட்ஸ் நோய்க்கு பரிகாரமும், இதுவே நீரிழிவுக் காரர்களுக்கும் நல்லது.
              தினமும் இரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை பொடித்தோ, முழுசாகவோ கொடுத்து வந்தால் ரத்தத்திலுள்ள கூடுதல் சர்க்கரை கட்டுப்படும். அல்லது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை ம்ட்டும் வடிகட்டிக் குடிக்கலாம்.
              பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க வெந்தயத்தை வறுத்து இடித்துக் கொடுக்கலாம்.
           மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு ரத்தப் போக்குடையவர்களுக்கும் பிரசவித்த பெண்களுக்கும் வெந்தயத்தை வறுத்து இடித்து நெய், சீனி சேர்த்து ஹல்வா செய்து கொடுப்பது இழக்கும் தெம்பை மீட்க உதவும்.
               நல்ல ருசியான உணவு தயாரிப்புகளின் வாசனை வந்தும்கூடி பசி கிளம்பாமலோ நாவில் ருசி மரத்துப் போயிருந்தாலோ கூட இதுவே மருந்து.
               கணையம், கல்லீரல் வீக்கம், வயிற்றுப் போக்கு, அஜீரணம், நெஞ்சு எரிச்சல்... போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கும் வெந்தயம் ஒரு மாமருந்து. வயிற்றுக் கோளாறுக்கு மட்டுமல்லாது, வெந்தயநீர் காய்ச்சலையும் கட்டுப்படுத்தும். சிறுநீர்ப்போக்கை சீராக்கும்.
               இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்தில் கருத்தரிக்காதாம். 


பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வருவது கைமேல் பலந்தரும்.   

அளவுக்கு மிஞ்சி நிறைய முடி உதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை வீதம் பின்பற்றவேண்டும்.

பருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு பருக்களும் காணாமல் போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல் உஷ்ணத்தால் பருக்கள் வந்தால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊறவைத்து குறைந்தது மூன்று நான்கு நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும்.   
 இது பாலி யல் உந்து சக்தியை அளிக்கக் கூடியது
 ஆண்களின் விந்து உற்பத்தி உட்பட பாலியல் ஹோர்மோன்களைப் பலப்படுத்தக் கூடி யது. படுக்கை அறையை சூ டாக்க வெந்தயம் பெரிதும் கை கொடுக்கும்
வெந்தயக்கீரை சூப்
தேவை
வெந்தயக்கீரை – 1 கைபிடி (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
வெங்காயம் (பெரியது) – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
பால் – 1 கப்
சோளமாவு – 1 டே.ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
நெய் (அ) எண்ணெய் – 1 டே.ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பாத்திரத்தை அடுப்பலிட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இட்டு வதக்கவும்.
பின்னர் சோளமாவைப் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கீரையை அதனுடன் சேர்த்து வேக விடவும்.
எல்லாம் வெந்தவுடன் அதில் பாலை சேர்த்து பின்னர், உப்பு, மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.
வெந்தயம் வெந்தய விதையில் எண்ணெய் அடங்கியுள்ளது. வீச்சம் உள்ள கசப்பான எண்ணெய். இதில் உயிர்ச்சத்துக்கள, கனிப்பொருட்கள் அதிகளவில் உள்ளன. சமையலில் வாசமூட்ட வெந்தய விதையை சமையலில் சேர்ப்பார்கள். மருத்துவ குணங்கள் எரிச்சலைத் தடுக்கும், சிறுநீரைப் பெருக்கும், இரைப்பை அசௌகரியங்களை நீக்கும். பாலுணர்வைத் தூண்டும், தாய்ப்பாலைப் பெருக்கும், உடம்பின் உள்ளுறுப்புக்களைச் சுத்திகரிக்கும். அழகு சாதனம் மற்றும் கேசப் பராமரிப்பில் வெந்தயம் உபயோகமாகும். உடலில் ஏற்ப்படும் திருகுவலி, வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு வாயு உபத்திரவம், நாட்பட்ட அசீரணம் ஆகிய உபாதைகளில் நல்ல பயனை அளிக்கும். வெந்தயத்தில் இரும்புச் சத்து அதிகமாதலினால் சோகையில் குணம் பெற உதவும். வெந்தய விதைகளை நெய்யில் வறுத்து, பொடி செய்து அத்துடன் கோதுமை மாவு, சக்கரை சேர்த்து அல்வா தயாரிக்கலாம். தினமும் சிறிதளவு இந்த அல்வாவை சாப்பிட்டு வர பிரசவித்த பெண்கள் விரைவிலேயே இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். 

இளம் தாய்மார்கள் வெந்தய விதையை கஞ்சி வைத்து சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும். உமிழ் நீர் சுரப்பியின் இயக்க கோளாறு காரணமாக சிலருக்கு உணவின் சுவை தெரியாமல் போய்விடும். வெந்தய விதை சுவைத் திறனை ஊக்குவிக்கும். மூக்கில் சளியப்படலம் உருவாகி மணத்தை நுகரமுடியாத நிலையில் உள்ளவர்கள் வெந்தயத்தைக் கொண்டு தங்கள் நுகரும் சக்தியை மேம்படுத்திக் கொள்ளலாம். வெந்தய விதை பொடுகை அகற்றுவும் பயன்படுகின்றது. இரண்டு மேசைக்கரண்டி விதையை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்துவிட வேண்டும். காலையில் மிருதுவாகிவிட்டிருக்கும் விதையை அரைத்து பசை போலாக்கிக் கொள்ளவும். இந்தப் பசையை மண்டையில் தேய்த்து அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு சீயக்காய் கொண்டு தலையை அலசி விடலாம். காய்சலில் அவதிப்படுபவருக்கு வெந்தய விதையை அரைத்து பொடி செய்து தேநீர் தயாரித்து குடிக்கச் செய்தால் காய்ச்சல் தணியும். வுயிற்றில் ஏற்ப்படும் அழற்சிக்கும் வெந்தய தேநீர் மிகவும் நல்லது. குடல, சிறுநீரகம் மற்றும் சுவாசப் பாதையில் உண்டாகும் சளியை அகற்றும். குடற் புண்ணிலும் நற்பலன்களை வழங்கும். மார்ச்சளி, காய்ச்சல், பீனிசம் (சைனஸ்), நீர்க்கோப்பு ஆகிய உபாதைகளின் தொடக்க நிலையில் வெந்தய தேநீர் குணம் பெற உதவும். உடம்பை வியர்க்கச் செய்து நச்சுத் தன்மையை வெளியேற்றும். காய்ச்சல் கட்டத்தை குறுகியதாக்கும். 

வெந்தய தேநீரில் சில சொட்டுக்கள் எலுமிச்சம் சாறு சேர்த்துக்கொள்ள மணம் கிடைக்கும். தொண்டைப் புண்ணுக்கு வெந்தய நீரைக் கொப்பளிக்க சரியாகும். 1.25இலீ. தண்ணீரில் இரண்டு மேசைக் கரண்டியளவு வெந்தய விதையை இட்டு தணிவான தீயில் அரை மணி நேரம் காய்ச்சி எடுக்க வேண்டும், ஆறவிட்டு வடிகட்டி கொப்பளிக்க பயன்படுத்தலாம். வெந்தய தேநீர் வாய் நாற்றத்தைப் போக்கும். வாய் மற்றும் நாசிப் பாதையில் சளி தங்குவதால் கெட்ட நாற்றம் ஏற்ப்படும் இதே பிரச்சனை சிறுநீர்ப் பாதை, இரைப்பை குடல் பாதை, இரத்த ஓட்டம், பிறப்புறுப்பு ஆகியவற்றிலும் ஏற்ப்படக்கூடும். வெந்தய தேநீரை தொடர்ந்து சாப்பிட்டு வர தீர்வு கிடைக்கும். நீரிழிவுக்கான சிகிச்சையிலும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம். தினமும் 25கி. வெந்தயத்தை உட்கொள்ள இரத்தத்தில் கூடிய சக்கரையின் அளவு குறையும். நீரிழிவு நோயாளியின், குளுக்கோஸ், குருதிக்கொழுப்பு (கொலஸ்ரோல);, ட்ரைகிளிசரைட் அளவுகளையும் அது குறைக்கும். வயிறூதல, உதடு வெடிப்பு ஆகியவற்றிற்கும் வெந்தய விதை மருந்தாகும். உணவை எளிதில் சீரணிக்கச் செய்யும், பசி உணர்வைத் தூண்டும். உடல் சூட்டைத் தணித்து குளிர்மை செய்யும். வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தின்றபின்பு பாலோ, தயிரோ குடிக்க வயிற்றுவலி, வயிற்றுச் சூடு நீங்கும். வெந்தய விதையை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலையில் தடவிவர முடி நீளமாகவும் கருமையாகவும் வளரும். முடி உதிர்வதும் குறையும். புளுங்கல் அரிசி ஒரு கோப்பை, இரண்டு தேக்கரண்டி வெந்தயம், இரண்டு தேக்கரண்டி உழுத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து வெந்தய தோசை மா தயார் செய்யலாம். வெந்தய தோசையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்காது. மாதவிலக்கு ஒழுங்கற்று காண்பது, மாதவிலக்கு ஒழுங்கற்று காண்பதுஇ மாதவிலக்கின் போது வயிற்றுவலி, இடுப்பு வலி ஏற்ப்படுவது போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து சக்கரை கலந்து சாப்பிடலாம். வெந்தயக் கஞ்சி தாய்ப்பால் அதிகம் சுரக்க வழிசெய்யும். இந்தக் கஞ்சியோடு தேங்காய்ப்பால், சில உள்ளிப்பற்களை சேர்த்துச் சாப்பிட குடல் வாய்வு நீங்கும். சூட்டால் வரும் வாய்ப்புண்ணும் ஆறும். வெந்தயம் கல்லீரல் நோய்களை நீக்கும்
இருமலை குணப்படுத்தும்.
கபம், சளியை அகற்றுகிறது.
மந்தமாய் இருப்பவர்களை சுறுசுறுப்பாக்குகிறது.
உடலுக்கு வனப்பைக் கொடுக்கிறது.
அஜீரணத்தைப் போக்குகிறது.
பசியைத்தூண்டிவிடுகிறது.
கண் நோய்களைப் போக்குகிறது.
கண் பார்வையைத் தெளிவாக்குகிறது.
சொறி சிரங்கை நிவர்த்தி செய்கிறது.
வயிற்றுக் கோளாறுகளை, வயிற்று உப்புசம், வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு, போன்ற நோய்களைப் குணப்படுத்துகிறது.
வாத சம்பந்தான நோய்களை குணப்படுத்தும்.
நிரிழிவு நோயை கட்டுப்படுத்துப்படுகிறது.
நரம்புத்தளாச்சியைப் போக்குகிறது.
பற்களை உறுதியாக்குகிறது.
 மாதவிடாய் கோளாறா?
வெந்தயக்கீரையைஅடிக்கடி சமைத்து சாப்பிட்டுவந்தால்  மாதவிடாய்  கோளாறுகள் நீங்கிவிடும்.

இடுப்பு வலியா ?

இன்று அதிக உழைப்பில்லாதால் ஏகப்பட்ட நோய்களை பெருகின்றன.   , அவற்றில் இடுப்புவலியும் ஒன்று, இந்த வலிக்கு ஆளானவர்கள் படாதபாடுபடுகின்றனர் இவர்களுக்கு நிவராணம்  வெந்தயக்கீரையை ஆகும்.   இக்கீரையோடு தேங்காய்ப்பால் நாடடுக்கோழிமுட்டை நிரிழிவுநோய்  உள்ளவர்களுக்கு  மஞசள் கருவை நீக்கவும்  கசகசா சீரகம்  மிளகுத்தூள் பூண்டு  இவைகளோடு நெய்யையும் சோத்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் இடுப்புவலி பறந்துபோகும்.

குழந்தைகளின் அறிவு வளர்ச்சிககு

படிப்பில் கவனம் செலுத்தாத, எவ்வளவு படித்தாலும்  மறந்துபோகிற, படிப்பென்றால் கசக்கிறது என்கிற குழந்தைகளுக்கு, படிப்பென்றால் மகிழ்ச்சி தரக்கூடிதாக மாற்றுகின்ற தன்மை இக்கீரைக்கு உண்டு. இக்கீரையை பாசிப்பருப்பு மற்றும் வேர்க்கடலை நெய்யுடன் கலந்து அடிக்கடி சமைத்து சாப்பிட்டுவந்தால் ஒரிரு மாதங்களில்  நன்கு படிப்பார்கள்.
  • இருமலை குணப்படுத்தும்.
  • கபம், சளியை அகற்றுகிறது.
  • மந்தமாய் இருப்பவர்களை சுறுசுறுப்பாக்குகிறது.
  • உடலுக்கு வனப்பைக் கொடுக்கிறது.
  • அஜீரணத்தைப் போக்குகிறது.
  • பசியைத்தூண்டிவிடுகிறது.
  • கண் நோய்களைப் போக்குகிறது.
  • கண் பார்வையைத் தெளிவாக்குகிறது.
  • சொறி சிரங்கை நிவர்த்தி செய்கிறது.
  • வயிற்றுக் கோளாறுகளை, வயிற்று உப்புசம், வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு, .
  • மூலவாயுவை குணமாக்குகிறது.
  • தொத்து நோய்களிலிருந்து காக்கிறது.
  • எலும்புகளைக் உறுதிப்படுத்துகிறது.
  • மூட்டுவலிகளை குணமாக்கிறது.
  • வீக்கம் கட்டி புண்களை அகற்றுகிறது.
  • மார்பு வலியிலிருந்து காக்கிறது.
  • தொண்டைப் புண்ணை ஆற்றுகிறது.
  • தலைசுற்றலை நிறுத்துகிறது.
  • பித்தத்தால் எற்படும் கிறுகிறுப்பை போக்குகிறது.
  • உடல்சூட்டை தணிக்கிறது.



கருத்துகள் இல்லை: