COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

நொச்சி

குளம் குட்டைகளின் கரையோரங் களிலும் பாதையோரங்களிலும் பக்கக் கிளைகளுடன் படர்ந்து வளரும் சிறு செடியாகும். மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது. நொச்சி இலையின் மணம் காரணமாகச் சில பூச்சிகள் இதனை நெருங்குவதில்லை. ஆதலால் தானியப் பாதுகாப்பில் நொச்சி இலை பயன்படுகிறது. ஓலைச் சுவடிகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.

  1. நொ‌ச்‌சி இலையை இடி‌த்து சாறு பி‌ழி‌ந்து க‌ட்டிக‌ளி‌ன் ‌மீது பூ‌சி வர க‌‌ட்டி கரையு‌ம். ‌வீ‌க்க‌ம் குறையு‌ம்.
  2. நொ‌ச்‌சி, தழுதாழை, மா‌வில‌ங்க‌ம் ஆ‌கியவ‌ற்றை சம அளவு எடு‌த்து சாறு ‌பி‌ழி‌ந்து, ஒரு ஆழா‌க்கு எடு‌த்து அ‌‌தி‌ல் 35 ‌கிரா‌ம் பெரு‌ங்காய‌த்தை பொடி‌த்து‌ப் போ‌ட்டு‌க் கா‌ய்‌ச்சவும்.
  3. அது குழ‌ம்பு பத‌த்‌தி‌ல் வ‌ந்தது‌ம் அ‌தி‌ல் ஒரு கர‌ண்டி ‌வீத‌ம் எடு‌த்து தொட‌ர்‌ந்து 10 நா‌ட்க‌ள் சா‌ப்‌பிட கு‌ன்ம‌ம் என‌ப்படு‌ம் அ‌ல்ச‌ர் வ‌யி‌ற்றுவ‌லி குணமாகு‌ம்.
  4. நொ‌ச்‌சி மல‌ர்களை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி பொடி செ‌ய்து இர‌ண்டு ‌சி‌ட்டிகை அளவு எடு‌த்து பன‌ங்க‌ற்க‌ண்டு சே‌ர்‌த்து சா‌ப்‌பிட ர‌த்த பே‌தி, ர‌த்த வா‌ந்‌தி குணமாகு‌ம்.
  5. நொ‌ச்‌சி இலையை ‌சி‌றிது ஆமண‌க்கு எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி ஒ‌த்தட‌ம் இட, மூ‌ட்டுவ‌லி, மூ‌ட்டு ‌வீ‌க்க‌ம் குறையு‌ம்.
  6. நொ‌ச்‌சி‌க் கொ‌ழு‌ந்து, சு‌க்‌கு சே‌ர்‌த்து அரை‌த்து, அதனுட‌ன் ச‌ர்‌க்கரை, நெ‌ய் சே‌ர்‌த்து லே‌கிய‌ம் போல ‌கி‌ண்டி ஒரு ம‌ண்டல‌ம் உ‌ட்கொ‌ண்டு வர ‌சீத‌க்க‌ழி‌ச்ச‌லி‌னா‌ல் ஏ‌ற்படு‌ம் கடு‌ப்பு குணமாகு‌ம்.

மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், ஜலதோஷத் தலைவலிக்கு கைகண்ட மருந்து நொச்சி தைலம். நொச்சித் தைலம் பல நோய்களைத் தீர்க்கும் நிவாரணியும் கூட.

மேலும் நொச்சி இலையில் ஒத்தடம் கொடுத்தால் வாயுப்பிடிப்பு, சுளுக்கு நீங்கும். இதன் இலையைச் சட்டியில் போட்டு பிறகு அடுப்பில் சூடு செய்து உடம்பு ஏற்கும் அளவு சூட்டில் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும். வலியுள்ள இடத்தில் துவையலாக அரைத்தும் பூசலாம். மண்ணீரல் வீக்கமும் கட்டுப்படும்.

நொச்சி இலைகளை ஒரு துணிப்பையில் அடைத்துப் தலையணையாகப் பயன்படுத்தினால் ஜலதோஷம் பறந்துவிடும். உலர்ந்த நொச்சி இலையைத் தூள் செய்து பீடிப்புகை பிடித்தாலும் ஜலதோஷம் நீங்கும். இதனுடைய சாறு வயிற்றுப் புண்ணையும் ஆற்றும். இலைச்சாற்றை தலைப்பகுதியிலும், கழுத்திலும் தேய்த்து, சிலமணி நேரம் உடலில் ஊறவிட்டு இளஞ்சூட்டு வெந்நீரில் குளித்தால் கழுத்துவலி நீங்கி, காதில் தங்கிய நீரும் வெளியேறும்.

சீழ்பிடித்து அழுகிச் சொட்டும் புண்ணைக் கூட நொச்சி தைலத்தால் குணப்படுத்தலாம். நொச்சி இலையுடன் திப்பிலி சேர்ந்த கஷாயம் ஜலதோஷக் காய்ச்சலுக்கு நல்லது. கேளாச் செவியையும் கேட்க வைக்கும்.

பிரசவத்துக்கு முன்னும் பின்னும் கர்ப்பப்பையில் ஏற்படும் வலி குறைய நொச்சி இலை போட்டு ஊற வைத்த தண்ணீரைச் சூடுபடுத்தி, உடம்பில் ஊற்ற வேண்டும்.

தீராத வாதநோய் வலிப்பு குணமாக நொச்சி இலையுடன் பூண்டு, ரோஜா மொட்டு அல்லது காசினி விதைப்பூ சேர்த்த அரிசிக்கஞ்சியை குடிக்கலாம். மிளகு, நெய் இரண்டும் சேர்த்து நொச்சிக் கொழுந்தை அரைத்து வழித்த சாரும் 2 தோலாவுடன் (1 தோலா என்பது 12 கிராம்) 2 தோலா அளவு குடித்தால் ஈரல் வீக்கம் கட்டுப்படும்.

நொச்சி வேர்ப்பட்டையின் சாரத்தை புண்ணுக்கு டிஞ்சராகத் தடவலாம். நொச்சி வேர்ப்பொடி மூலத்துக்கும், சீதபேதிக்கும் மருந்தாக பயன்படுகிறது. நொச்சிவேர் நாள்பட்ட புண், குடல்புண், வயிற்றுப் புழு, தொந்தரவுக்கு கிருமி நாசினியாகும். உலர்ந்த நொச்சிப் பூக்களைத் தூள் செய்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, காய்ச்சல் குணமாகும். நொச்சிப் இலையும், பட்டையும் தேள்கடிக்கு நல்ல மருந்து.

2 கருத்துகள்:

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி சொன்னது…

நல்ல பயனுள்ள விசயங்களைத்தான் தருகிறது உங்களது வலைப்பூ.பதிவுகள் தொடரட்டும்

Unknown சொன்னது…

மிக்க மகிழ்ச்சி தோழி .....