ஓரிதழ் தாமரை

ஓரிதழ் தாமரை என்றவுடன் நீரில் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகும். இதன் இலையை வாயில் வைத்து சுவைத்தால் வாயில் குழகுழப்பு தட்டும்.
இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது.

இதற்கு இரத்தின புருஷ் என்ற பெயரும் உண்டு.

தாதுவையுண்டாக்குந்தனிமேகத்தைத் தொலைக்கும்

ஆதரவா மேனிக் கழகுதருஞ் - சீதம்போம்

சீரிதழ்த் தாமரைவாழ் செய்ய மடவனமே?

ஓரிதழ்த் தாமரையை யுண்

- அகத்தியர் குணபாடம் 



அதிக தூக்கமின்மை, நேரத்திற்கு சரியாக உணவு அருந்தாமை போன்ற காரணங்களால் பலரின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மேலும் சில தீய பழக்கங்கள் குடிகொண்டு உடலை நாசப்படுத்திவிடுகின்றன.
இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட ஓரிதழ் தாமரை மிகவும் பயனுள்ள மருந்தாகும். ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும்.

நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும்.


மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும்.


உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.சுரக்காய்ச்சளால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கசாயம் செய்து அருந்தி வந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும்.

உடல்எடை குறைய ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது.


தாதுநஷ்டத்தைப் போக்க : இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம்.


ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாந்துவிடுகின்றனர். சிலர் இதனை மறைத்துவைத்து மனவேதனைக்கு ஆளாகி விடுகின்றனர்.இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை (இலை, தண்டு, வேர், பூ, காய்) நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம்.இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்

ஓரிதழ் தாமரை முழு மூலிகையையும் காய வைத்து பொடி செய்து  தொடர்ந்து உண்ண

தொப்பை குறையும் -உடல் எடை குறையும்
விந்தணுக்கள் கூடும் ,விந்து கட்டும்,
மேக சூடு குறையும்,தேக பலம் உண்டாக்கும் .

6 கருத்துகள்:

  1. இந்த மூலிகை பொடி எங்களிடம் கிடைக்கும் செல் நெ9952197303

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரிதழ்த்தாமரை செடி எங்களிடம் உள்ளது..தேவைக்கு..6385485137-அருணகிரி..பல்லடம்..Whatsapp 8667307279

      நீக்கு
  2. மிகவும் பயனுள்ள முலிகை

    பதிலளிநீக்கு
  3. How much rate orithal thamarai
    sedi

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா4:32:00 PM

    இந்தச் செடி மருந்து எங்களிடம் கிடைக்கும் தொடர்புக்கு 9952197303

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா6:38:00 PM

    இந்த மூலிகை எங்களிடம் சென்னை செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கிடைக்கும் இது வந்து பச்சையாகவும் மிக மிக சுத்தமாகும் அதேபோன்று புதிதாகவும் தயாரிக்கப்பட்டது செல் நம்பர் 9952 197303

    பதிலளிநீக்கு